கசங்காமல் படியுங்கள் !
புத்தகமும் பெண்ணும் ஒன்றே !
Monday, December 28, 2009
Tuesday, December 22, 2009
முத்தம்
முத்தத்தில் ஊமை
அது சத்தமில்லா முத்தம்
நான்கு சுவர் தாண்டி கேட்டால்
அது முரட்டு முத்தம்
கண் திறந்து கொடுக்கும் முத்தம்
அது கானல் முத்தம்
கண் மூடி கொடுத்தால் தான்
அது காதல் முத்தம்
அன்புடன் கொடுக்கும்
எல்லா முத்தமும் அழகு முத்தம்
அன்பில்லா முத்தமெல்லாம்
வெற்று முத்தம் !
பின் குறிப்பு :
பூக்களை மட்டும் முத்தமிட்டவன் எழுதியது!
அது சத்தமில்லா முத்தம்
நான்கு சுவர் தாண்டி கேட்டால்
அது முரட்டு முத்தம்
கண் திறந்து கொடுக்கும் முத்தம்
அது கானல் முத்தம்
கண் மூடி கொடுத்தால் தான்
அது காதல் முத்தம்
அன்புடன் கொடுக்கும்
எல்லா முத்தமும் அழகு முத்தம்
அன்பில்லா முத்தமெல்லாம்
வெற்று முத்தம் !
பின் குறிப்பு :
பூக்களை மட்டும் முத்தமிட்டவன் எழுதியது!
Monday, November 30, 2009
அதிசய படைப்பு
உன்னை படைத்தவன் நல்லவன்
அதனால் தான் அனுப்பி வைத்தான் ;
இல்லையென்றால் அவன் படைத்ததில் best
நீ என்று அவன் பக்கத்தில் வைத்திருப்பான் !
அதனால் தான் அனுப்பி வைத்தான் ;
இல்லையென்றால் அவன் படைத்ததில் best
நீ என்று அவன் பக்கத்தில் வைத்திருப்பான் !
Tuesday, September 8, 2009
ஈர முத்தம்
ஈர முத்தம் தர இன்னும்
வீரம் வரவில்லை கண்ணே
தாலி ஏறட்டும் தருகிறேன்
ஈரம், காரம்(Spicy) என்று
எல்லா ஜாதி முத்தங்களும் ....
வீரம் வரவில்லை கண்ணே
தாலி ஏறட்டும் தருகிறேன்
ஈரம், காரம்(Spicy) என்று
எல்லா ஜாதி முத்தங்களும் ....
Saturday, July 25, 2009
Saturday, July 18, 2009
Thursday, July 9, 2009
என்னவளே !
அழகான சிலை என்க நீ
உயிரற்ற கல் இல்லை
வானத்து நிலவென்க
வெகு தொலைவிலும் இல்லை
மலர் என்க ஒரே நாளில்
உலரப் போவதும் இல்லை
என் ஒப்புமை இல்லா உவமையே !
உயிரற்ற கல் இல்லை
வானத்து நிலவென்க
வெகு தொலைவிலும் இல்லை
மலர் என்க ஒரே நாளில்
உலரப் போவதும் இல்லை
என் ஒப்புமை இல்லா உவமையே !
Saturday, June 27, 2009
நீயில்லா அப் பின்னிரவு ..
நீயில்லா அப் பின்னிரவில்
நிலவு தேய்ந்த வேகத்தில்
இரவு தேயவில்லை :>(
நொடி முள்ளோ மணி முள்
ஆகிப்போனது :>(
இப் பிரிவையும் ரசித்தேன் :>)
நீ வைத்த ரோஜா செடியின்
மொட்டு மலர்ந்த அதிசயத்தை
முதன் முதலில் கண்டதால்
நீயில்லா அப் பின்னிரவில் ..
நிலவு தேய்ந்த வேகத்தில்
இரவு தேயவில்லை :>(
நொடி முள்ளோ மணி முள்
ஆகிப்போனது :>(
இப் பிரிவையும் ரசித்தேன் :>)
நீ வைத்த ரோஜா செடியின்
மொட்டு மலர்ந்த அதிசயத்தை
முதன் முதலில் கண்டதால்
நீயில்லா அப் பின்னிரவில் ..
Monday, June 22, 2009
Friday, June 12, 2009
Monday, May 25, 2009
நிர்வாணம்
உடைகள் உரித்ததில்
சில உண்மைகள் உரிந்ததில்
விளைந்த நிர்வாணத்தில்
கிழிந்தன சில போலி நிஜங்கள் !
சில உண்மைகள் உரிந்ததில்
விளைந்த நிர்வாணத்தில்
கிழிந்தன சில போலி நிஜங்கள் !
Friday, May 15, 2009
Tuesday, May 12, 2009
ஈழத்தில் நடப்பதென்ன - 3
ஈழத்தில் நடப்பதென்ன - 2
சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?
வெடி குண்டு
உலோகத்துகள் அடைத்து
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?
தடையில்லா காதல்
தார் சாலை - காதலி
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)
Monday, May 11, 2009
Friday, May 8, 2009
Thursday, May 7, 2009
ஈழத்தில் நடப்பதென்ன -1
மருதாணியால் சிவக்கும் கைகள்
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!
Tuesday, May 5, 2009
காக்கை
உறவினர் மறுத்ததால்
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !
Subscribe to:
Posts (Atom)