Monday, May 25, 2009

நிர்வாணம்

உடைகள் உரித்ததில்
சில உண்மைகள் உரிந்ததில்
விளைந்த நிர்வாணத்தில்
கிழிந்தன சில போலி நிஜங்கள் !

Friday, May 15, 2009

கடங்காரன்



தன் காசை
தான் வாங்க
கடங்காரன் போல்
காத்திருப்பார்
ATM வாசலில் !

Tuesday, May 12, 2009

ஈழத்தில் நடப்பதென்ன - 3


வடிக்க ஒரு கை அரிசியில்லை
வற்றிய வயிற்றில்
பசியென்ற உணர்வே இல்லை
தேம்பி அழ கண்ணிலோ
நீரும் இல்லை
கணவனோ கன்னி வெடியில் மரணம்
கருவிலே குழந்தையும் மரணம்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
ஒப்பாரி வைக்க ஊரும் இல்லை
என்னை மட்டும் ஏன்
விட்டு வைத்தாய் கடவுளே
என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும்
பார்த்து விட்டு சாகவா ?

ஈழத்தில் நடப்பதென்ன - 2

சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?

வெடி குண்டு

உலோகத்துகள் அடைத்து
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?

கதை

நான் கதைக்கு கரு தேடினேன்
அவள் கருவிற்கு கதை தேடினாள்!!

Good Night SMS

என் இரவு
சிறு கதையா?
நெடுந் தொடரா ?
அவளின் Good night SMS
முடிவு செய்யும் !

தடையில்லா காதல்

தார் சாலை - காதலி
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)

Monday, May 11, 2009

மனிதம்

மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம் !
மனிதம் வளர்ப்போம்
மாண்புயர்வோம்!

Friday, May 8, 2009

உங்கள் ஓட்டு விலை மதிப்பற்றது ..

உடலை விற்பது
விபச்சாரம் எனில்
ஓட்டை விற்பதும்
விபச்சாரமே ...

Thursday, May 7, 2009

ஈழத்தில் நடப்பதென்ன -1

மருதாணியால் சிவக்கும் கைகள்
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!

Tuesday, May 5, 2009

காக்கை

உறவினர் மறுத்ததால்
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !