உடைகள் உரித்ததில்
சில உண்மைகள் உரிந்ததில்
விளைந்த நிர்வாணத்தில்
கிழிந்தன சில போலி நிஜங்கள் !
Monday, May 25, 2009
Friday, May 15, 2009
Tuesday, May 12, 2009
ஈழத்தில் நடப்பதென்ன - 3
ஈழத்தில் நடப்பதென்ன - 2
சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?
வெடி குண்டு
உலோகத்துகள் அடைத்து
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?
தடையில்லா காதல்
தார் சாலை - காதலி
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)
Monday, May 11, 2009
Friday, May 8, 2009
Thursday, May 7, 2009
ஈழத்தில் நடப்பதென்ன -1
மருதாணியால் சிவக்கும் கைகள்
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!
Tuesday, May 5, 2009
காக்கை
உறவினர் மறுத்ததால்
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !
Subscribe to:
Posts (Atom)