
வடிக்க ஒரு கை அரிசியில்லை
வற்றிய வயிற்றில்
பசியென்ற உணர்வே இல்லை
தேம்பி அழ கண்ணிலோ
நீரும் இல்லை
கணவனோ கன்னி வெடியில் மரணம்
கருவிலே குழந்தையும் மரணம்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
ஒப்பாரி வைக்க ஊரும் இல்லை
என்னை மட்டும் ஏன்
விட்டு வைத்தாய் கடவுளே
என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும்
பார்த்து விட்டு சாகவா ?
No comments:
Post a Comment