Thursday, May 7, 2009

ஈழத்தில் நடப்பதென்ன -1

மருதாணியால் சிவக்கும் கைகள்
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!

No comments:

Post a Comment